ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
3 படத்துக்குப்பிறகு தனுஷ் அதிக நம்பிக்கையுடன் நடித்து வரும் படம் மரியான். நீர்ப்பறவை, கடல் படங்களைப்போன்று இந்த படமும் கடற்கரையோர மக்கள் சார்ந்த கதையில் உருவாகி வருகிறது. கதைப்படி மீனவனாக நடிக்கும் தனுஷ். இரவு பகல் பாராமல் எந்நேரம் இயக்குனர் படப்பிடிப்பை வைத்தாலும் நடிப்பதற்கு தயாராக இருக்கிறாராம். உப்புக்காற்றை நீண்ட நேரம் சுவாசிக்க கஷ்டமாக உள்ளது என்று யூனிட்வாசிகள் சொன்னபோதும், அந்த மாதிரி வார்த்தை தனுஷ் வாயிலிருந்து மட்டும் வர மறுக்கிறதாம். அந்த அளவுக்கு ஒரு பரம்பரை மீனவனாகவே மாறிப்போயிருக்கிறாராம்.
மேலும், இப்படத்துக்காக தென்ஆப்பிரிக்காவிலுள்ள கடற்கரை பகுதிகளில் படமாக்கப்பட்டபோது, சுடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சுட்டெரிக்கும் மணலில் விழுந்து புரண்டெல்லாம் நடித்தாராம் தனுஷ். அதைப்பார்த்து கலங்கிப்போன அப்படத்தின் நாயகியான பூ பார்வதி, எந்தவொரு பிரபல ஹீரோக்களுமே இப்படி நடிக்கத்துணிய மாட்டார்கள். அந்த வகையில் தனுஷ் கிரேட் ஆக்டர் என்பதை நிரூபித்து விட்டார். அவர் போன்ற நடிகர்களுடன் நடிக்க சான்ஸ் கிடைத்தது ரொம்ப பெருமையாக உள்ளது என்று தனுஷ் புராணம் பாடிக்கொண்டு திரிகிறார் பார்வதி.