அஜித்திற்கு இப்படி ஒரு வினோத பிரச்சனை இருந்ததா ? சுந்தர்.சி கூறிய ஆச்சர்ய தகவல் | அல்லு அர்ஜுன் மீது ஆந்திர போலீசார் வழக்கு | 'சர்பரோஸ்' 25ம் வருடத்தில் 2ம் பாகத்தை அறிவித்த அமீர்கான் | படத்தை ரிலீஸ் பண்ண விடாமல் டொவினோ தாமஸ் தடுக்கிறார் ; இயக்குனர் விரக்தி | குகைக்குள் விழுந்தவருக்கு பிஸ்கட்டால் மேக்கப் ; மஞ்சும்மேல் பாய்ஸ் இயக்குனர் புது தகவல் | ஜிவி பிரகாஷ் - சைந்தவி பிரிவு: குடும்ப பிரச்னை காரணமா? | கெட்ட வார்த்தையுடன் சந்தானம் பட புரோமோ வீடியோ | 2026 தேர்தல் - விஜய், விஷாலைத் தொடர்ந்து சூர்யா ? | சித்தப்பா பவன்கல்யாணை சந்தித்த ராம் சரண் | விக்ரமின் ‛வீர தீர சூரன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியானது! |
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சினிமாவுக்கு நிகராக வெளி தளங்களிலும் இசை அமைத்து வருகிறார். விளையாட்டு போட்டிகள், பண்டிகைகள், தேசப்பற்று, மொழி உயர்வு ஆகியவற்றுக்கும் இசை அமைத்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது டாக்குமென்டரி தொடர் ஒன்றுக்கு இசை அமைக்கிறார்.
சில வருடங்களுக்கு முன் டில்லியில், தற்கொலை செய்துகொண்ட புராரி குடும்பத்தினரைப் பற்றிய ஆவணப் படம் ஒன்று ‛ஹவுஸ் ஆப் சீக்ரெட்ஸ்: தி புராரி டெத்ஸ்' என்ற பெயரில் தொடராக உருவாகியுள்ளது. ஷப்த், பார்ச்ட் உள்ளிட்ட படங்களை இயக்கிய லீனா யாதவ் மற்றும் அனுபவம் சோப்ரா ஆகியோர் இயக்கி உள்ளனர். இது நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதற்கு ஏ.ஆர்.ரகுமான் பின்னணி இசை அமைத்துள்ளார்.
இதுகுறித்து ஏ.ஆர்.ரகுமான் கூறியிருப்பதாவது: லீனா யாதவுடன் சேர்ந்து பணியாற்றியது தனித்துவமான அனுபவமாக இருந்தது. மிகவும் சிக்கலான, உணர்வுப்பூர்வமான பிரச்சினையை இந்தத் தொடர் பேசுவதால் இதற்காக வேறுபட்ட, நுணுக்கமான அணுகுமுறை இசையில் தேவைப்பட்டது. பூடகமாக அதே சமயம் சுவாரசியமாகவும் இருக்க வேண்டும். இப்படி ஒரு தொடரில் பணியாற்றியதில் மகிழ்ச்சி. இதுவரை நான் செய்திராத ஒரு விஷயமாக இருந்தது, என்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.