ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி | மோடி பயோபிக் படத்தில் நடிப்பது உண்மையா? - சத்யராஜ் தந்த விளக்கம் | இந்தியன் - 2, இந்தியன்- 3 படம் குறித்த புதிய அப்டேட் வெளியிட்ட கமல் - ஷங்கர் | கூத்தாடி ஆகிட்டேன்னு திட்டுவார் : அப்பா குறித்து மதுரை முத்து உருக்கம் | முதியோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய கேப்ரில்லா செல்லஸ் | நெகட்டிவ் கமெண்ட்ஸ்களுக்கு வீஜே மகேஸ்வரி பதிலடி |
இந்தியத் திரையுலகில் பல்லாயிரம் ஹிட் பாடல்களைப் பாடியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். கடந்த ஆண்டு இதே நாளில் கொரோனாவுக்குப் பிந்தைய பாதிப்புகளால் மரணம் அடைந்தார். அவரது முதலாமாண்டு நினைவு நாளை சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் அனுசரித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் எஸ்பிபி பாடல்கள் பலவும் காலை முதல் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன.
மலையாள நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் இருவரும் எஸ்பிபி நினைவு தினத்தை அனுசரித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.
“நம் மனதில் என்றென்றும் எப்போதும் ஈடு இணையற்ற அவரது தெய்வீகக் குரலால் நிறைந்திருப்பார். எஸ்பிபி சாரை அவரது முதல் நினைவு தினத்தில் நினைவு கூறுகிறேன்,” என்று மோகன்லால் டுவீட் செய்துள்ளார்.
மம்முட்டி, “லெஜன்ட் நம்மை விட்டுப் பிரிந்து ஒரு வருடமாகிவிட்டது. அவரது பெரு மகிழ்ச்சியூட்டுகிற குரல் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது முதலாமாண்டு நினைவு தினத்தில் அவரை நினைவு கூறுகிறேன்,” என்று டுவீட் செய்துள்ளார்.