அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
சென்னை 28, சுப்ரமணியபுரம் படங்கள் மூலம் பிரபலமானவர் ஜெய். முன்வரிசை ஹீரோ பட்டியலில் இணையவில்லை என்றபோதும் சினிமாவில் தனக்கான இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளார். தற்போது அவர் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன.
அதில் சுசீந்திரன் இயக்கத்தில் மட்டும் குற்றமே குற்றம், சிவ சிவா என இரண்டு படங்களில் நடிக்கிறார். இதில் சிவ சிவா என்ற படத்தில் நடிப்பதோடு இசையமைப்பாளராகவும் உருவெடுத்துள்ளார் ஜெய். இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், நான் நடிகரானது ஒரு விபத்து. காரணம் நான் இசையமைப்பாளராக வேண்டும் என்று தான் சினிமாவுக்கு வந்தேன். எதிர்பாராத விதமாக நடிகராகி விட்டேன். ஆனபோதும் இசையமைப்பாளராக வேண்டும் என்ற கனவுகளுடன் பயணித்து வந்தேன். 19 வருடங்கள் கழித்து இப்போது சிவ சிவா என்ற படத்தில் எனது கனது கனவு நனவாகியுள்ளது. இந்த படத்தில் எனது இசையில் உருவான காடமுட்டை என்ற பாடலின் முதல் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது என்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார் ஜெய்.