அஜித்திற்கு இப்படி ஒரு வினோத பிரச்சனை இருந்ததா ? சுந்தர்.சி கூறிய ஆச்சர்ய தகவல் | அல்லு அர்ஜுன் மீது ஆந்திர போலீசார் வழக்கு | 'சர்பரோஸ்' 25ம் வருடத்தில் 2ம் பாகத்தை அறிவித்த அமீர்கான் | படத்தை ரிலீஸ் பண்ண விடாமல் டொவினோ தாமஸ் தடுக்கிறார் ; இயக்குனர் விரக்தி | குகைக்குள் விழுந்தவருக்கு பிஸ்கட்டால் மேக்கப் ; மஞ்சும்மேல் பாய்ஸ் இயக்குனர் புது தகவல் | ஜிவி பிரகாஷ் - சைந்தவி பிரிவு: குடும்ப பிரச்னை காரணமா? | கெட்ட வார்த்தையுடன் சந்தானம் பட புரோமோ வீடியோ | 2026 தேர்தல் - விஜய், விஷாலைத் தொடர்ந்து சூர்யா ? | சித்தப்பா பவன்கல்யாணை சந்தித்த ராம் சரண் | விக்ரமின் ‛வீர தீர சூரன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியானது! |
மறைந்த எழுத்தாளர் கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவல், தற்போது அதே பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது. மணிரத்னம் இயக்கும் இப்படம் இருபாகங்களாக உருவாகி வருகிறது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்
ஏற்கனவே பாண்டிச்சேரி, ஐதராபாத் ஆகிய பகுதியில் முடிந்த நிலையில் தற்போது மத்திய பிரதேசதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. முதலில் உர்ச்சா மற்றும் குவாலியர் பகுதிகளில் நடைபெற்று வந்த படப்படிப்பு நிறைவுபெற்றுள்ள நிலையில் அடுத்ததாக மகேஸ்வர் நகருக்கு படக்குழு சென்றுள்ளது. அங்கு நர்மதை நதி கரையில் உள்ள பழைவாய்ந்த அகில்யா கோட்டையில் வந்தியத்தேவன் - குந்தவை கதாபாத்திரங்களாக நடிக்கும் கார்த்தி மற்றும் த்ரிஷாவின் காதல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த படப்பிடிப்பு சில நாட்களில் முடியவுள்ள நிலையில் விரைவில் படக்குழு சென்னை திரும்பவுள்ளனர். அதன்பின்னர் கார்த்தி நடிக்கும் சில காட்சிகளை சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் படமாக்கப்படவுள்ளது.