மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை : சிம்பொனியை எழுதியிருப்பதாகவும் இளையராஜா தகவல் | கதைகளை புனைவதால் வருத்தம்: பாடகி சைந்தவி | மீண்டும் அயோத்தி மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்! | 4 மொழிகளில் திரைக்கு வரும் அமலாபாலின் ‛லெவல் கிராஸ்' | இந்தியன்-2 படத்தோடு வெளியாகும் இந்தியன்- 3 படத்தின் டிரைலர்! | சர்ச்சையாக பேசிய திமுக பேச்சாளர்: நடிகை ராதிகா புகார் | மோசடி வழக்கில் நயன்தாரா பட இயக்குனர் கைது | வித்தியாசமான ஹேர்ஸ்டைலுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ் | ரிலீஸ் செய்ய மறுத்த ஆத்திரத்தில் பேஸ்புக்கில் படத்தை வெளியிட்ட டொவினோ தாமஸ் பட இயக்குனர் | கார் விபத்தில் சிக்கிய லியோ நடிகரின் குடும்பம் ; உறவினர் ஒருவர் பலி |
கேரளா மக்களை பொறுத்தவரை ஓணம் திருநாள் கொண்டாட்டம் என்றால் அது அறுசுவை விருந்து சமைத்து உண்பதும், அன்றைய தினம் வெளியாகியுள்ள புதிய படங்களை தியேட்டர்களுக்கு குடும்பத்துடன் சென்று கண்டுகளிப்பதும் என இவை இரண்டும் தான் அன்றைய நாளை முழுமியாயானதாக்கும். ஆனால் தற்போது கேரளாவில் ஓணம் பண்டிகை களைகட்ட துவங்கி விட்டாலும் கூட, திரையுலகை பொறுத்தவரை கொரோனா இரண்டாவது அலை காரணமாக கடந்த வருடத்தை போல இந்த வருடமும் தியேட்டர்கள் திறப்பின்றி டல்லடித்தே கிடக்கிறது.
ஓணம் பண்டிகை முக்கிய நாள்.. என்றாலும் மலையாள ரசிகர்கள் ஓணம் பண்டிகையை முழுமையாக கொண்டாட முடியாத ஏக்கத்திலும் வருத்தத்திலும் இருக்கிறார்கள். அவர்கள் மனக்குறையை ஓரளவு தீர்ப்பது போல கடந்த சில நாட்களுக்கு முன் பிரித்விராஜ் நடித்த 'குருதி' திரைப்படம் ஒடிடி தளத்தில் வெளியானது. இதோ தற்போது சிறிய நடிகர்கள் நடித்துள்ள 'ஹோம்' என்கிற படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது..
அந்தவகையில் மலையாள ரசிகர்கள் பலரும் இந்த ஓணம் பண்டிகையை ஒடிடியில் ஏற்கனவே வெளியான தங்களுக்கு பிடித்தமான படங்களை பார்த்து ஓரளவுக்கு மன திருப்தி அடைந்து வருகிறார்கள். மேலும் அய்யப்பனும் கோஷியும், ஆண்ட்ராய்டு குஞ்சப்பன், தண்ணீர் மாத்தன் தினங்கள், போக்கிரி ராஜா, புலிமுருகன் என முந்தைய ஹிட் படங்களை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் இந்த ஓணம் பண்டிகை சீசனில் அதிகரித்துள்ளதாம்.