முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி |
சினிமா தயாரிப்பில் இப்போது பல நடைமுறைகள் மாறிவிட்டன. தங்களது படம் பற்றிய தகவல்கள் எப்படியாவது 'லீக்' ஆகிவிடக் கூடாது என்பதற்காக பல பாதுகாப்பு வழிமுறைகளை படக்குழுவினர் பின்பற்றுகிறார்கள்.
அவற்றில் ஒன்று அலுவலகங்களில் அணிவதைப் போன்ற ஐ.டி. கார்டு. படக்குழுவில் உள்ள இயக்குனர் முதல் லைட்மேன், உதவியாளர்கள் வரை அனைவருக்கும் அவர்களது பெயர், செய்யும் வேலை ஆகியவற்றுடன் புகைப்பட ஐ.டி கார்டுகள் வழங்கப்படுகிறது. இதனால், படக்குழுவிற்கு சம்பந்தமில்லாமல் யாராவது அரங்கிற்குள் நுழைந்தால் அவர்களைத் தடுக்க வசதியாக இருக்கிறது.
ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் படப்பிடிப்பு தற்போது உக்ரைன் நாட்டில் நடைபெற்று வருகிறது. அங்கு படப்பிடிப்புத் தளத்தில் ஐ.டி. கார்டு அணிந்து ஜுனியர் என்டிஆர் படப்பிடிப்பில் கலந்து கொண்டதை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. பக்கத்தில் இயக்குனர் ராஜமவுலியும் அவருடைய ஐ.டி. கார்டை எடுத்துக் காட்டுவதும் புகைப்படத்தில் உள்ளது.
அது குறித்து இன்ஸ்டாவில், “பல வருடங்களுக்குப் பிறகு ஐ.டி கார்டு அணிகிறேன். செட்டில் முதல் முறை..,” எனக் குறிப்பிட்டுள்ளார். கல்லூரியில் படித்ததற்குப் பிறகு இப்போதுதான் மீண்டும் ஐ.டி கார்டு அணிகிறார் போலிருக்கிறது.