அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடிக்கும் படம் 'மாநாடு'. சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகிறது.
இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கும், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் இடையே சம்பள விவகாரத்தில் ஏதோ பிரச்சினை என்றும் அதனால் படத்தின் வேலைகளை நிறுத்தி விட்டதாகவும் சிலர் சமூக வலைத்தளங்களில் செய்திகளைப் பரப்பினர்.
அதைப் பார்த்த வெங்கட் பிரபு உடனடியாக காட்டமாக பதிலளித்து டுவீட் போட்டுள்ளார். அதில், “யப்பா, சாமி... ஏன், ஏன், ஏன்.. தயவு செய்து வதந்திகளைப் பரப்பாதீர்கள். 'மாநாடு' படத்தின் வேலைகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. நிம்மதியா வேலை செய்ய விடுங்கப்பா,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் படத்தின் ஒரு பாடல் வெளியிடப்பட்டது. படத்தின் இறுதிக்கட்ட வேலைகளை முடித்து தியேட்டர்களில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.