ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிவா இயக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் மேற்கு வங்கத்தில் நடைபெறும் நிலையில் நான்கு நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு தனக்கான காட்சிகளில் நடித்து முடித்துக் கொடுக்கிறார் ரஜினி. மேலும், அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாகும் நிலையில், அடுத்தபடியாக ரஜினியின் 169ஆவது படத்தை தேசிங்கு பெரியசாமியும், 170ஆவது படத்தை தனுசும் இயக்குவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருப்பதோடு, இந்த படங்களோடு ரஜினி சினிமாவுக்கு முழுக்குப்போட திட்டமிட்டிருப்பதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து ரஜினி வட்டாரங்களில் விசாரித்தபோது, அவர்கள் சொல்லும் பதில் வேறு மாதிரியாக உள்ளது. அதாவது நடிப்புக்கு முழுக்குப்போடும் எண்ணம் ரஜினியிடம் இப்போதைக்கு இல்லை என்கிறார்கள். அவரைப் பொறுத்த வரை தொடர்ந்து சினிமாவில் நடித்துக் கொண்டேயிருப்பார். அதிலும் தற்போது வித்தியாசமான சிந்தனை கொண்ட இளைய தலைமுறை இயக்குனர்களின் படங்களில் நடிப்பதில் ரஜினிக்கு ஆர்வம் மிகுதியாக உள்ளது. அதனால் இன்னும் இரண்டு படங்களோடு ரஜினி நடிப்புக்கு முழுக்குப்போடுவதாக வெளியான செய்தி உண்மையில்லை என்கிறார்கள்.