ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மருத்துவ பரிசோதனை முடிந்து சென்னை திரும்பிய ரஜினி, சிவா இயக்கத்தில் தான் நடித்துவரும் அண்ணாத்த படத்தின் மீதமுள்ள பணிகளை முடிக்கிறார். சில நாட்கள் படப்பிடிப்பும் டப்பிங் பணியும் இருக்கின்றன. வரும் 12ந்தேதி சென்னையில் இதற்கான படப்பிடிப்பு தொடங்குகிறது. கோல்கட்டாவிலும் சில காட்சிகள் எடுக்கப்பட இருக்கிறது. எனவே ரஜினி கோல்கட்டா செல்லவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்த படம் வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ந்தேதி வெளியாக உள்ளது.
தற்போது ரஜினியின் அடுத்தப்படம் குறித்த தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. அந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ரஜினியின் 169வது படமாக இருக்கும். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பரில் தொடங்க திட்டமிட்டுள்ளனர். அதையடுத்து 170வது படமாக மருமகன் தனுஷ் இயக்கத்தில் நடிப்பார் என்றும் அந்த படம் அடுத்த ஆண்டு தொடங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.