ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குனர் மணிரத்னம் தற்போது இயக்கி வரும் படம் கடல். இதில் கார்த்திக் மகன் கவுதம் நாயகனாகவும், ராதா மகள் துளசி நாயகியாகவும் நடித்து வருகிறார்கள். கடற்புறத்தில் நடக்கும் கதை தான் கடல். பொதுவாக மணிரத்னம் படம் என்றாலே ஒருவித எதிர்பார்ப்பு இருக்கும். அவர் இயக்கும் படம் வெளியாகும் வரை படத்தின் கதை பற்றி வெளியில் சொல்லாமல் ரகசியம் காத்து வருவார். கடல் படத்திலும் அதே நிலை தான். ஆனால் இதில் இன்னும் ஒருபடி மேலே போய் இப்படத்தில் நடிக்கும் ஹீரோ கவுதம் மற்றும் ஹீரோயின் துளசி ஆகியோரின் முகத்தை கூட வெளியில் தெரியாத அளவுக்கு ரகசியம் காத்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இதுதான் அறிமுகப்படம். அதனால் தான் இத்தனை ரகசியம். இரு தினங்களுக்கு முன்னர் படத்தின் முதல் பார்வை என்ற பெயரில் ஒரு படத்தை வெளியிட்டிருந்தார் மணி. அதில் ஹீரோ கவுதமின் முகம் சுத்தமாக தெரியவில்லை. இதனால் கவுதம் எப்படி இருப்பார் என்ற ஆவல் எல்லோர் மனதிலும் நிலவியது.
இந்நிலையில் இப்போது அந்த சஸ்பென்ஸை உடைத்துள்ளார் மணி. கடல் ஹீரோவின் முதல் லூக் என்ற பெயரில் கவுதமின் படத்தை வெளியிட்டு இருக்கிறார். நீங்கள் அருகில் பார்க்கும் அவர் கார்த்திக்கின் மகன் கவுதம். இந்தபடம் கூட அவரின் முகம் சரியாக தெரியவில்லை என்று நீங்கள் நினைப்பது எங்களுக்கு புரிகிறது, என்ன செய்வது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மணிரத்னம், கவுதம் படத்தை வெளியிடுவார் போலத் தெரிகிறது. அடுத்து அவர் வெளியிட இருக்கும் படத்திலாவது கவுதமின் முகம் நன்றாக தெரியும் அளவுக்கு இருக்கும் என்று உங்களுடன் சேர்ந்து நாங்களும் ஆவலாய் எதிர்பார்க்கிறோம்.