அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து, வெற்றி பெற்ற படம் ‛கைதி'. இப்படம் வெளியாகி இரண்டாடுகள் ஆக போகிறது. இந்நிலையில் ‛‛இது தனது கதை, இதை திருடி தான் கைதி உருவாகி உள்ளது, எனக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்'' என கேரளா மாநிலம் கொல்லம் கோர்ட்டில் ராஜீவ் ரஞ்சன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ‛கைதி' படத்தை பிற மொழிகளில் ரீ-மேக் செய்யவும், கைதி 2 உருவாக்கவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக கைதி படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு வெளியிட்ட அறிக்கை : ‛‛எங்களது கைதி படத்தை ரீ-மேக் செய்யவும், இரண்டாம் பாகம் உருவாக்கவும் கேரள நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக செய்தி, ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். எங்களுக்கு அவ்வழக்கின் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் தெரியாத காரணத்தால் அதைப்பற்றிய விபரங்கள் எதுவும் தற்போது வெளியிட இயலாது. அதேசமயம் கைதி சம்பந்தப்பட்ட ஊடக செய்திகளில் எங்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நாங்கள் உறுதியாக மறுக்கவோ, சட்டப்படி இதை நிரூபிக்கவோ முடியும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். மேலும் சில செய்தி நிறுவனங்கள் வழக்கின் விசாரணை முடிவு தெரியாமல் இத்திரைப்படம் சார்ந்த எவரையும் களங்கப்படுத்தி செய்தி வெளியிடாமல் ஊடக தர்மம் காக்கவும் கேட்டுக் கொள்கிறோம்''.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.