முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி |
ஒரு இயக்குனருக்கு, வெற்றி தான் அடுத்த வாய்ப்பை தீர்மானிக்கும் என்பது போல, தர்பார் படத்தை வெற்றிப் படமாக கொடுக்க தவறியதால், அடுத்து தமிழில் கிடைக்க இருந்த விஜய் படமும் ஏ.ஆர்.முருகதாஸுக்குக்கு கை நழுவி போனது. இதனால் தெலுங்கு திரையுலகம் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார் முருகதாஸ். அல்லு அர்ஜுனுக்கு கதைசொல்லி அவரிடம் சம்மதமும் பெற்றுவிட்டார்.
தற்போது புஷ்பா படத்தில் நடித்து வரும் அல்லு அர்ஜுன், அதை முடித்ததும் வக்கீல் சாப் படத்தை இயக்கிய வேணு ஸ்ரீராம் படத்தில் நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் வேணு ஸ்ரீராம் படத்தில் நடிப்பது உண்மைதான் என்றாலும், தற்போது முருகதாஸ் படத்திற்கு தான் அல்லு அர்ஜூன் முன்னுரிமை கொடுக்க விரும்புகிறாராம். அதனால் புஷ்பா படப்பிடிப்பு முடிவடைந்ததும் முருகதாஸ் படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டு அந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறாராம் அல்லு அர்ஜுன். அதற்கான தீவிரமான வேலைகளில் முருகதாஸ் தற்போதே இறங்கி விட்டாராம்.