ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தென்னிந்தியத் திரையுலகத்தில் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகிலும் பல்லாயிரக்கணக்கானப் பாடல்களைப் பாடியவர் மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம்.
கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதற்குப் பிந்தைய பாதிப்புகளால் உடல்நலம் குறைந்து செப்டம்பர் 25ம் தேதியன்று மரணம் அடைந்தார். அவரது மறைவால் கோடிக்கணக்கான ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர். அவரது மறைவு பலரையும் துயரத்தில் ஆழ்த்தியது. அன்று அவருடைய பாடல்களைப் பற்றி பலரும் பல விதங்களில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அவர் மீதான தங்களது அபிமானத்தை வெளிப்படுத்தினார்கள்.
அவர் மரணமடைந்த பிறகு வரும் முதல் பிறந்த நாள் இன்று. அவர் மறைந்தாலும் அவரது குரலால் வசீகரிக்கப்பட்ட அத்தனை ரசிகர்களும் இன்று அவரைப் பற்றிய தங்கள் நினைவுகளை மேலும் பகிர்ந்து அவரைப் பற்றிய நினைவுகளை சமூக வலைத்தளங்களில் மீண்டும் பதிவிட்டு வருகிறார்கள். பல சினிமா பிரபலங்களும் அவர்களது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார்கள்.
மறைந்த பின்னும் ரசிகர்களால் கொண்டாடப்படும் திரைக் கலைஞர்கள் ஒரு சிலரே. அதில் எஸ்பிபியும் ஒருவர் என்பது அவரது குடும்பத்தினருக்கு நெகிழ்ச்சியைத் தரும் என்பது உண்மை.