மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
சமீபகாலமாக பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது அதிகரித்து விட்டது. அந்த வகையில் கடந்த ஆண்டில் ரஜினி, அஜித் என முன்னணி நடிகர்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருநபர் தான் இப்படியொரு தகவலை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தெரிவித்ததாக தெரிய வந்தது.
இந்தநிலையில் நேற்று சென்னையில் உள்ள நடிகர் அஜித்தின் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தகவல் வந்துள்ளது. அதையடுத்து அஜித்தின் வீட்டிற்கு போலீசார் சோதனை செய்ததாகவும், ஆனால் அது புரளி என தெரியவந்தது. மிரட்டல் விடுத்த அந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.