'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கிரீடம், மதராசப்பட்டினம், தலைவா என பல படங்களை இயக்கியவர் ஏ.எல்.விஜய். தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் தலைவி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. நடிகை அமலாபாலை காதலித்து திருமணம் செய்து கொண்ட விஜய், அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். அதையடுத்து ஐஸ்வர்யா என்ற டாக்டரை 2019ல் இரண்டாவது திருமணம் செய்தார். இவர்களுக்கு கடந்த மே 30-ம்தேதி ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு துருவா என்று பெயர் வைத்துள்ளனர். துருவா பிறந்து ஓராண்டு நிறை வடைந்ததையொட்டி முதல் பிறந்தநாளை கடந்த மே 30-ந்தேதி அன்று தங்களது வீட்டில் டைரக்டர் விஜய் - ஐஸ்வர்யா தம்பதியினர் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். அதுகுறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகின.