ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அடுத்தவர்களின் துக்கத்தில் பங்கெடுக்க முடியாவிட்டாலும் அவர்களின் துக்கத்தை கொண்டாட வேண்டாம் என்கிறார் டைரக்டர் கெளதமன். சென்னையில் நேற்று மாலை, மலேசியாவில் தயாரான அடுத்த கட்டம் என்ற த்ரில்லர் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் ஸ்ரீகாந்த், டைரக்டர்கள் இராஜகுமாரன், கெளதமன் உள்பட சிலர் கலந்து கொண்டனர்.
அப்போது இயக்குனர் கெளதமன் பேசுகையில், சினிமாவைப்பொறுத்தவரை வெற்றி தோல்வி என்பதை யாரும் கணிக்க முடியாது. யாரும் தோல்வி படம் கொடுக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. இருப்பினும் தோல்வி என்பது தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக நம்மை தொடர்ந்து வருகிறது. அப்படி ஒரு படம் தோல்வி என்கிறபோது அதில் சம்பந்தப்பட்ட அனைவருமே பாதிப்படைகிறார்கள். இதனால் பணக்கஷ்டம் மனக்கஷ்டம் என்று சிக்கிக்கொள்கிறார்கள். ஆனால் இப்படி ஒருவர் வேதனையில் வாடும்போது, அதை மற்ற சக கலைஞர்கள் சந்தோசமாக கொண்டாடுவதுதான் கவலை அளிக்கிறது.
அதிலும் இன்றைய கோடம்பாக்கத்தில் ஒருத்தரின் தோல்வியை மற்றவர்கள் பார்ட்டி வைத்தே கொண்டாடுகிறார்கள். தியேட்டரில் ரெண்டு ரீல் ஓடும்போதே படம் ஊத்திக்கிச்சு என்று வெளியில் இருப்பவர்களுக்கு எஸ்எம்எஸ் செய்கிறார்கள். சினிமாக்காரர்களே இப்படி செய்வது கவலை தருகிறது. இது சினிமாவுக்கு ஆரோக்யான விஷயம் அல்ல. இந்த நிலை மாறனும். சக கலைஞர்களின் துக்கத்தில் பங்கெடுக்கா விட்டாலும், அதை கொண்டாட வேண்டாம். குறிப்பாக பார்ட்டி வைத்து கொண்டாடுவதெல்லாம் ரொம்ப கொடுமையான விஷயம்.
இவ்வாறு அவர் பேசினார்.