தாய்க்குத் தலைமகன், வசீகரா, ஜெயிலர் : ஞாயிறு திரைப்படங்கள் | அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் |
கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாட்டில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் தளர்வில்லாத ஊரடங்கு அடுத்த ஒரு வாரத்திற்கு கடைபிடிக்கப்பட உள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பே சினிமா மற்றும் டிவி தொடர்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. அதற்கு முன்பு வரை நடைபெற்ற சில படப்பிடிப்புகளின் காரணமாக கொரோனா தொற்றால் பலர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் மரணம் அடைந்தும் விட்டனர்.
சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் ஊரடங்கை மீறி நடைபெற்ற மலையாள 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் படப்பிடிப்பு அதிரடியாக நிறுத்தப்பட்டு அரங்கிற்கு 'சீல்' வைக்கப்பட்டது.
கடந்த வருடம் கொரோனா பாதிப்பின் போது படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்ட போது டிவி நிகழ்ச்சிகள், தொடர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. சில மாதங்களுக்கு பழைய நிகழ்ச்சிகளையே திரும்பவும் ஒளிபரப்பினார்கள். அதே போன்று இந்த வருடமும் ஆரம்பமாகிவிட்டது.
சில டிவிக்களில் முக்கிய ஷோக்களை மறு ஒளிபரப்பு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். சில தொடர்களைத் தொகுத்து ஒளிரப்பு செய்து வருகிறார்கள். இன்னும் இரண்டு வார காலத்திற்காவது ஊரடங்கு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரையில் டிவி நிகழ்ச்சிகளில் 'ரிபீட்'களைத்தான் அதிகம் பார்க்க வேண்டியதிருக்கும்.