ஹிட் சீரியலில் முக்கிய நடிகை மாற்றம் | சினிமாவில் அடிவாங்கினா கூட வருத்தப்படுவாங்க அம்மா: நடிகர் ஹரிகிருஷ்ணன் நெகிழ்ச்சி | எழுத்தாளர்கள் மனதுக்குள் நடிப்பவர்கள்! அழகாக சொல்கிறார் சந்திரகுமார் | முரண்களை கடந்த முழுமையான அன்பு இது | கைவிடப்படும் விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப் தொடர்! | மலேசியாவில் ‛தி கோட்' படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்த திட்டம்! | யஷ் படத்தில் இணைந்த அஜித் பட நடிகை! | சூர்யா 44வது படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகர்! | நண்பரையே திருமணம் முடித்த ஸ்வேதா கெல்கே! வைரலாகும் புகைப்படங்கள் | விவசாயி, சூர்யவம்சம், கேப்டன் மில்லர் - ஞாயிறு திரைப்படங்கள் |
நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனாவின் இரண்டாவது அலை ரொம்பவே தீவிரமா இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைப்பது ஒரு பக்கம் சவாலாக இருக்கிறது என்றால், இன்னொரு பக்கம் அவர்களை நோயாளிகளாக அனுமதிப்பதற்கு ஏற்ற படுக்கை வசதிகள் கூட பற்றாக்குறையாக இருக்கின்றன.
இந்தநிலையில் பிரபாஸ் தற்போது நடித்து வரும் ராதே ஷ்யாம் படக்குழுவினர் படத்திற்காக பிரமாண்டமான மருத்துவமனை செட் ஒன்றை உருவாக்கி படப்பிடிப்பை நடத்தி வந்தனர். தற்போது ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்று கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு படுக்கை வசதி பற்றாக்குறை நிலவுவதாக கூறியதை அடுத்து, படப்பிடிப்புக்காக உருவாக்கி வைத்திருந்த 50க்கும் குறையாத படுக்கைகள், ஸ்டாண்டுகள், ஸ்ட்ரெச்சர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உட்பட அனைத்தையும் கொடுத்து உதவியுள்ளது. படக்குழுவின் இந்த பெருந்தன்மையை பலரும் பாராட்டி வருகின்றனர்.