ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
குடும்பக் குத்து விளக்கு அஞ்சலி கவர்ச்சி குத்து நடிகையான பிறகு கதை என்பதை மறந்து காசில்தான் முழுக்கவனத்தையும் பதித்திருக்கிறார். கேட்கிற காசை கொடுத்துவிட்டால் போதும் அது புதுமுக நடிகரின் படமாக இருந்தாலும் அம்மணி கண்டுகொள்வதில்லை. வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கி விடுகிறார். அதனால் இப்போது அஞ்சலி வேண்டும என்று நினைப்பவர்கள் கதையைகூட ரெடி பண்ணாமல் கரன்சி கட்டுகளை ரெடி பண்ணிவிட்டுத்தான் அவரை சந்திக்கிறார்கள்.
அந்த வகையில், முன்னணி டைரக்டர், முன்னணி ஹீரோக்களின் படம் என்றால் சம்பள விசயத்தில் கறாலாக பேசாத அஞ்சலி, வளர்ந்து வரும் ஹீரோக்களின் படங்கள் என்றால் கண்ணை மூடிக்கொண்டு சம்பளம் பேசுகிறாராம். மாட்டுத்தரகு செய்வது போல் டவலை கைமேல் போட்டு மூடிக்கொண்டு அவர் விரல் வித்தை காட்டுவதைப்பார்த்து ஆடிப்போகிறார்கள் படாதிபதிகள். என்றாலும் அஞ்சலிக்கென்று தற்போது ஒரு மார்க்கெட் இருப்பதால், சரியில்லாத படத்தையும் தனது கவர்ச்சியால் தூக்கி நிறுத்தி விடுவார் என்று அவரை முற்றுகையிடுகிறார்கள் படாதிபதிகள். இதனால் அருகில் தாய்குலத்தையும் உட்கார வைத்துக்கொண்டு சரியாக கல்லாக்கட்டி வருகிறார் அஞ்சலி.