அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
நடிகர் விஜய் சைக்கிளில் வந்து ஓட்டளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கான விளக்கத்தையும் அவர் கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திரைப்பிரபலங்கள் பலரும் காலை முதலே ஆர்வமாய் ஓட்டளித்து சென்றனர். நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து ஓட்டு போடும் இடத்திற்கு சைக்கிளில் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவரை பின்தொடர்ந்து ஏராளமான ரசிகர்கள் வந்தனர். தொடர்ந்து ஓட்டளித்து விட்டு உதவியாளர் ஒருவரின் பைக்கில் வீட்டிற்கு திரும்பினார்.
இதனிடையே விஜய் சைக்கிளில் வந்து ஓட்டளித்த விஷயம் சமூகவலைதளங்களில் வைரல் ஆனது. அதோடு தற்போது நாட்டில் பெட்ரோல், டீசல் விலை கிட்டத்தட்ட ரூ.100 என்ற நிலையில் உள்ளதால் அதை குறிக்கும் வகையில் மறைமுகமாக பா.ஜ.விற்கு எதிராக தனது எதிர்ப்பை தெரிக்கவே விஜய் இப்படி சைக்கிளில் ஓட்டளிக்க வந்ததாக சமூகவலைதளங்களில் செய்தி பரவியது.