முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி |
பூர்வீகம் தமிழ்நாடாக இருந்தாலும் பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவர் நயன சாய். கன்னடத்தில் ஒம்பதானே ஆடுபுதா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இப்போது அவர் தமிழுக்கு வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
எனது தாய்மொழி தமிழ். நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக பெங்களூருவில் இருந்து சென்னை வந்து கூத்துப்பட்டறையில் நடிப்பு கற்றேன். இப்போது தமிழ் சினிமாவுக்கு வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. வேல்முருகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். இதில் தேவயானி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக தடைபட்டிருந்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்க இருக்கிறது.
அடுத்து அறிமுக இயக்குனர் சாம் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். இதில் நான் திருநெல்வேலி பெண்ணாக நடிக்கிறேன். அதற்காக இப்போது பயிற்சி பெற்று வருகிறேன். அடுத்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். இதனை தயாரிப்பு தரப்பில் இருந்து முறைப்படி அறிவிப்பார்கள். இது தவிர ஓடிடி தளத்திற்கென்று தயாராகும் ஒரு படத்திலும் நடிக்கிறேன். என்றார்.