தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி | மோடி பயோபிக் படத்தில் நடிப்பது உண்மையா? - சத்யராஜ் தந்த விளக்கம் | இந்தியன் - 2, இந்தியன்- 3 படம் குறித்த புதிய அப்டேட் வெளியிட்ட கமல் - ஷங்கர் | கூத்தாடி ஆகிட்டேன்னு திட்டுவார் : அப்பா குறித்து மதுரை முத்து உருக்கம் | முதியோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய கேப்ரில்லா செல்லஸ் |
தமிழ்த் திரையுலகை புதிய இளமைப் புயல் ஒன்று அடுத்த மாதம் தாக்க வருகிறது. பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் 'சுல்தான்' படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாக உள்ள ராஷ்மிகா மந்தானா தான் அந்தப் புயல்.
கன்னடம், தெலுங்கு என இரு மொழிகளிலும் தனது துறுதுறு நடிப்பால் எண்ணற்ற இளம் ரசிகர்களைப் பெற்றவர் ராஷ்மிகா. இன்று சென்னையில் நடைபெற்ற 'சுல்தான்' படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
தட்டுத் தடுமாறி தமிழில் பேசினார். அவர் பேசுவது புரிந்தால் என்ன புரியவில்லை என்றால் என்ன அவர் பேசும் போது சிரிப்பதையே ரசிகர்கள் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்கள்.
அது மட்டுமல்ல, வந்ததிலிருந்து கிளம்பும் வரை துறுதுறுவென அவர் இருந்தது ரசிகர்களைக் கவர்ந்தது. இப்படித்தான் சில வருடங்களுக்கு முன்பு நஸ்ரியா நசீம் வந்தார். சீக்கிரமே திருமணம் செய்து கொண்டு போய்விட்டார்.
அவரது வரிசையில் வர உள்ள ராஷ்மிகா இன்று பேசும் போது, தயாரிப்பாளர் பிரபுவிடம் அடுத்த படமும் சைன் பண்ண ரெடி என இப்போதே அவரது தயாரிப்பில் அடுத்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் தமிழ் மக்களை காதலிக்கிறேன். சுல்தான் படம் புதிய அனுபவமாக இருந்தது என்றார்.
சீக்கிரமே ராஷ்மிகாவின் அடுத்த தமிழ்ப் பட அறிவிப்பை நாம் எதிர்பார்க்கலாம்.