ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
"அங்காடித்தெரு அஞ்சலி, சினிமாவில் நடிக்க வந்து, பல வருடங்கள் ஆகிறது என்ற போதும், ஆரம்பத்தில், அவருக்கான சம்பளம் குறைச்சலாகவே இருந்தது. "கலகலப்பு படத்துக்கு பிறகு, பக்கா கமர்ஷியல் நடிகையாகி விட்டார். நடித்து வரும் படங்களில் கிளாமரில் புகுந்து விளையாடி வருகிறார். இதனால், அஞ்சலியின் படக்கூலியும், கிடுகிடு வென உயர்ந்து விட்டது. அதன் காரணமாக, இதுவரை சொந்த வீடு இல்லாமல் இருந்த அவர், முதல் முதலாக, சென்னையில் ஒரு சொந்த வீடு வாங்கியுள்ளார். ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த புதிதில் இருந்தே, இதே வீட்டில் தான் குடியிருந்தார் அஞ்சலி. முதலில் வாடகைக்கு இருந்தவர், பின்னர் சொந்தமாகவே, அந்த வீட்டை வாங்கி விட்டார். எல்லாம், சென்டிமென்ட் தான் காரணமாம்.