சர்ச்சையாக பேசிய திமுக பேச்சாளர்: நடிகை ராதிகா புகார் | மோசடி வழக்கில் நயன்தாரா பட இயக்குனர் கைது | வித்தியாசமான ஹேர்ஸ்டைலுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ் | ரிலீஸ் செய்ய மறுத்த ஆத்திரத்தில் பேஸ்புக்கில் படத்தை வெளியிட்ட டொவினோ தாமஸ் பட இயக்குனர் | கார் விபத்தில் சிக்கிய லியோ நடிகரின் குடும்பம் ; உறவினர் ஒருவர் பலி | இயக்குனரின் கணவர் பேட்டியால் சிக்கலில் மம்முட்டி | அன்று… இன்று… புகைப்படங்களைப் பகிர்ந்து நன்றி சொன்ன விஜய் கனிஷ்கா | மகாபலிபுரத்தில் முடிந்த 'மேக்ஸ்' படப்பிடிப்பு | 'டாக்சிக்' படத்தின் கதாநாயகி கியாரா அத்வானி | 'வடக்கன்' தலைப்புக்கு சென்சார் எதிர்ப்பு |
சிவா இயக்கத்தில் ரஜினி, மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி என பலர் நடித்து வரும் படம் அண்ணாத்த. டி.இமான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு லாக் டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதையடுத்து ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் மீண்டும் டிசம்பர் 13-ந்தேதி படப்பிடிப்பு தொடங்கியது. ரஜினி உள்பட பிரபலங்கள் தனி விமானத்தில் அழைத்து செல்லப்பட்டனர்.
ஆனால் அங்கு ஒருவார காலம் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதோடு ரஜினிக்கும் ரத்த அழுத்த மாறுபாடு ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது சென்னையில் படப்பிடிப்பு துவங்கி உள்ளது.
இந்த நிலையில் இப்படத்தில் தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக அவர் வில்லன் வேடங்களிலேயே அதிகமாக நடித்து வருவதால் இப்படத்திலும் வில்லனாகவே நடிப்பார் என்று தெரிகிறது.