ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிட்டத்தட்ட பத்துக்கும் குறைவான கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து பஹத் பாசில் தயாரித்து நடித்த 'சீ யூ சூன்' என்கிற படம் வெளியானது. கொரோனா தாக்கம் நிலவிய நேரத்திலேயே எடுக்கப்பட்டது என்பதால், அந்தப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த நிலையில் தற்போது பஹத் பாசில், தர்ஷனா ராஜேந்திரன், காமெடி நடிகர் சௌபின் சாஹிர் என மொத்தம் மூன்று கதாபாத்திரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு இருள் என்கிற படம் உருவாகியுள்ளது.
இப்போது நிலைமை ஓரளவு சரியாகி விட்டதால், இந்தப்படம் தியேட்டர்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தப்படமும் ஓடிடி தளத்தில் தான் வெளியாக இருக்கிறதாம். நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் .லாபகரமான தொகைக்கு ஒப்பந்தம் போடப்பட்டு விட்டதாம். ஆனாலும் இன்னும் அதிகாரப்பூர்வமாக இந்த விஷயத்தை அறிவிக்கவில்லை.
காரணம் இந்தப்படத்தை பஹத் பாசில் மற்றும் மம்முட்டியின் ஆதரவு தயாரிப்பாளரான ஆன்டோ ஜோசப் ஆகியோர் தான் இணைந்து தயாரித்துள்ளார்கள். சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம்-2வை தியேட்டர்களில் வெளியிடாமல் ஓடிடிக்கு கொடுத்ததற்காக அவர் மீது வருத்தத்தில் இருக்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள். அதனால் மெதுவாக இந்த விஷயத்தை வெளியே அறிவிக்கலாம் என மௌனம் காக்கிறது பஹத் பாசில் தரப்பு.