ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் த்ரிஷ்யம். தமிழில் இப்படம் கமல் நடிக்க பாபநாசம் என்ற பெயரில் தயாரானது. மலையாளத்தைப் போலவே தமிழிலும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தை ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். முதல் பாகத்தில் நடித்த மோகன்லால் - மீனாவே இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளனர். அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தற்போது இப்படம் ரிலீசாக உள்ளது.
த்ரிஷ்யம் 2 படம் உருவாகிறது என்ற தகவல் வெளியான போதே, தமிழிலும் பாபநாசம் 2 உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அப்படியே ரீமேக் செய்யப்பட்டால் அதில் கமலே நடிப்பாரா என்ற கேள்வியும் எழுந்தது. ஏனென்றால் இந்தியன் 2, விக்ரம் என ஏற்கனவே ஒப்பந்தமான பட வேலைகளையே சட்டசபைத் தேர்தலையொட்டி தள்ளி வைத்துள்ளார் கமல். எனவே பாபநாசம் 2வில் அவர் நடிப்பாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
இந்நிலையில் இது குறித்து பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார் இயக்குநர் ஜீத்து ஜோசப். அதில், 'கமல் அனுமதி கிடைத்தால் 'பாபநாசம் 2' படத்தை இயக்க தான் தயாராக இருப்பதாகவும், கமலின் முடிவை பொறுத்தே 'பாபநாசம் 2' படம் உருவாகுமா? என்பதை சொல்ல முடியும்' எனவும் அவர் கூறியுள்ளார்.