கதைகளை புனைவதால் வருத்தம்: பாடகி சைந்தவி | மீண்டும் அயோத்தி மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்! | 4 மொழிகளில் திரைக்கு வரும் அமலாபாலின் ‛லெவல் கிராஸ்' | இந்தியன்-2 படத்தோடு வெளியாகும் இந்தியன்- 3 படத்தின் டிரைலர்! | சர்ச்சையாக பேசிய திமுக பேச்சாளர்: நடிகை ராதிகா புகார் | மோசடி வழக்கில் நயன்தாரா பட இயக்குனர் கைது | வித்தியாசமான ஹேர்ஸ்டைலுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ் | ரிலீஸ் செய்ய மறுத்த ஆத்திரத்தில் பேஸ்புக்கில் படத்தை வெளியிட்ட டொவினோ தாமஸ் பட இயக்குனர் | கார் விபத்தில் சிக்கிய லியோ நடிகரின் குடும்பம் ; உறவினர் ஒருவர் பலி | இயக்குனரின் கணவர் பேட்டியால் சிக்கலில் மம்முட்டி |
சர்ச்சைக்குரிய படங்கள் எடுத்து அதை வியாபாரமாக்கி கலெக்ஷன் பார்ப்பது தான் ராம்கோபால் வர்மாவின் ஸ்டைல். என்.டி.ராமராவின் வாழ்க்கை, தாவுத் இப்ராஹிமின் வாழ்க்கை, ஐதராபாத்தில் நடந்த ஆணவக்கொலை என பரபரப்பாக படம் இயக்கியவர் அடுத்து இயக்கி உள்ள படம் தான் திஷா என்கவுண்டர்.
தெலுங்கானாவில் ஐதராபாத் அருகே 2019ம் ஆண்டு பணிக்கு சென்று விட்டு மொபட்டில் திரும்பிக் கொண்டிருந்த இளம் கால்நடை மருத்துவரை சமூக விரோதிகள் 5 பேர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்றார்கள். இந்த படுபாதக செயலை செய்த 5 பேரும் அந்த இடத்திலேயே என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
இந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து திஷா என்கவுண்டர் என்ற படத்தை ராம்கோபால் வர்மா இயக்கி உள்ளார். இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று திஷாவின் தந்தை ஏற்கனவே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். ராம்கோபால் வர்மா அலுவலகம் முன் பெண்கள் சங்கத்தினரும் போராட்டங்கள் நடத்தினர்.
இந்த நிலையில் திஷா என்கவுன்டர் படத்தை தணிக்கை குழுவுக்கு ராம்கோபால் வர்மா அனுப்பினார். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்தில் சர்ச்சை காட்சிகள் உள்ளதாகவும், பாலியல் பலாத்கார கொடுமையை அப்படியே காட்சிப்படுத்தி இருப்பதாகவும் கூறி தணிக்கை சான்றிதழ் தர மறுத்து விட்டனர். இதை தொடர்ந்து படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு ராம்கோபால் வர்மா அனுப்பி உள்ளார்.