ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழில் விஜய், ஜெயம் ரவி என்று முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பது போல், தெலுங்கிலும் அல்லு அர்ஜுன், ராம் சரண் என்று, அங்குள்ள பிரபல ஹீரோக்களுடன் நடித்து வருகிறார், அமலா பால். ஆனால், அந்த படங்களில் நடிக்கும் மற்ற நடிகைகளுக்கும், அமலா பாலுக்குமிடையே தொழில்முறை போட்டி ஏற்பட்டிருப்பதாக செய்தி பரவியுள்ளது. அதுகுறித்து அமலாவைக் கேட்டால்,"நான் நடிக்கும் படங்களில் எத்தனை ஹீரோயின் இருந்தாலும், அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. என் கேரக்டர் பிடிக்கிற பட்சத்தில், அந்த படங்களை ஏற்று நடிப்பேன். மற்றபடி, உடன் நடிக்கும் நடிகைகளை, நான் போட்டி மனநிலையுடன் பார்ப்பதே இல்லை.என் வேலை உண்டு, நான் உண்டு என்று இருப்பேன். மற்றவர்களைப்பற்றி யோசித்து, நேரத்தை வீணடிக்காமல், என்னைப்பற்றியும், என் வளர்ச்சியைப் பற்றி மட்டுமே நான் யோசிப்பதுண்டு என்கிறார் அமலா பால்.