‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி | மோடி பயோபிக் படத்தில் நடிப்பது உண்மையா? - சத்யராஜ் தந்த விளக்கம் |
தென்னிந்தியத் திரையுலகத்திலிருந்து இந்திய அளவில் முன்னேறிவிட்ட நாயகனாக இருக்கிறார் தெலுங்கு நடிகரான பிரபாஸ். தற்போது 'ராதே ஷ்யாம்' படத்தில் நடித்து வரும் பிரபாஸ் அடுத்து 'சலார், ஆதி புருஷ், நாக் அஷ்வின் இயக்கும் படம்' என தொடர்ந்து நடிக்க உள்ளார்.
இதில் 'சலார்' படத்தை 'கேஜிஎப்' பட இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்குகிறார். கடந்த வாரம் தான் இப்படத்தின் பூஜை ஐதராபாத்தில் நடைபெற்றது. படத்தில் ஹிந்தித் திரையுலகத்தைச் சேர்ந்த ஒருவரைத்தான் நாயகியாக நடிக்க வைக்க நினைத்திருந்தார்களாம். ஆனால், தற்போது அந்த வாய்ப்பை தமிழ் நடிகையான ஸ்ருதிஹாசன் கைப்பற்றி விட்டதாகச் சொல்கிறார்கள்.
சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்த 'கிராக்' படம் ஸ்ருதிஹாசனக்கு மீண்டும் ஒரு வெற்றியைக் கொடுத்துவிட்டது. மேலும், தென்னிந்திய அளவில் மட்டுமல்லாது இந்திய அளவிலும் புகழ் பெற்ற நடிகையாக இருக்கிறார் ஸ்ருதிஹாசன். எனவே அவரையே நடிக்க வைக்கலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அப்படி நடந்தால் பிரபாஸ், ஸ்ருதிஹாசன் முதல் முறையாக இணையும் படமாக இந்தப் படம் இருக்கும்.