நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா | சிம்பு மீது புகார் : அண்ணன், தம்பி பிரச்னை என்கிறார் ஐசரி கணேஷ் | 'இந்தியன் 2' - புரமோஷன் இன்று ஆரம்பம் | ஜுனியர் என்டிஆருக்காக விட்டுக் கொடுத்த கரண் ஜோஹர் |
தமிழ், தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஐதராபாத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். உடல் நலம் தேறி மும்பையில் உள்ள தன் வீட்டிற்குத் திரும்பினார்.
தமன்னா, தன்னுடைய உடலழகை மிகவும் கட்டுக்கோப்பாகக் காப்பாற்றி வந்தார். கொரோனா காரணமாக கொஞ்சம் இளைத்துப் போய்விட்டார். தற்போது தொடர் உடற்பயிற்சி செய்து மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிட்டதாக மகிழ்ச்சியுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
“நீங்கள் தீவிரமாக இருக்க வேண்டியதில்லை, சீராக இருந்தாலே போதும், இரண்டு மாதங்கள் சீராக இருந்ததால், கோவிட்டுக்கு முந்தைய என்னுடைய உடலைப் பெற்றுவிட்டேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தமிழில் தமன்னா எந்தப் படத்திலும் நடிக்கவில்லை என்றாலும், தெலுங்கில் 'சீட்டிமார், எப் 3' மற்றும் பெயரிடப்படாத இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.