காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா | சிம்பு மீது புகார் : அண்ணன், தம்பி பிரச்னை என்கிறார் ஐசரி கணேஷ் | 'இந்தியன் 2' - புரமோஷன் இன்று ஆரம்பம் | ஜுனியர் என்டிஆருக்காக விட்டுக் கொடுத்த கரண் ஜோஹர் | படம் தாமதமானதால் கண்ணீர் விட்ட கதாநாயகி | சூதாட்ட படத்தில் விஜய்சேதுபதி | விடுதலை 2ம் பாகத்தில் எஸ்.ஜே.சூர்யா? | வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா | பிளாஷ்பேக்: 'மூன்று முடிச்சு' படத்தின் மூலம் ஹீரோவாக்க நினைத்த பாலச்சந்தர்: மறுத்த ஜெயபாரதி |
தமிழ் சினிமாவில் எப்போதுமே இரண்டிரண்டு நடிகர்களாக போட்டி போடுவதுதான் வழக்கம். எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல், அஜித் - விஜய் என்ற வரிசையில் தனுஷ் - சிம்பு என வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.
தனுஷ் தன்னுடைய பாதையை தெளிவாகப் போட்டுக் கொண்டு ஹாலிவுட் வரை முன்னேறிவிட்டார். ஆனால், சிம்புவின் பாதை தடுமாற்றத்துடன் தான் உள்ளது. பொங்கலுக்கு வெளிவந்த 'ஈஸ்வரன்' படம் கூட வசூலுக்கு தடுமாறிக் கொண்டிருப்பதாகத் தகவல்.
அப்படத்தில் தனுஷை உசுப்பேற்றும் வகையில், “ 'நீ அழிக்கிறதுக்காக வந்த அசுரன்னா, நான் காக்கறதுக்காக வந்திருக்கேன்....ஈஸ்வரன்டா' என சிம்பு வசனம் பேசியிருப்பார்.
தனுஷ் நடித்து 2019ல் வெளிவந்த 'அசுரன்' படம் தனுஷுக்கு நல்லதொரு பெயரைப் பெற்றுத் தந்தது. அவருடைய நடிப்பைப் பலரும் பாராட்டினார்கள். அப்படத்தைக் குறிப்பிட்டுத்தான் 'ஈஸ்வரன்' படத்தில் சிம்பு வசனம் பேசியிருப்பார் என்பதை குழந்தையும் சொல்லிவிடும்.
இந்நிலையில் தனுஷ் நேற்று தன்னுடைய டுவிட்டர் புரொபைலில் 'அசுரன்/நடிகர்' என தன் பயோ-வை மாற்றியுள்ளார். 'ஈஸ்வரன்' படத்தில் சிம்பு பேசிய வசனத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் அவர் இப்படி மாற்றியுள்ளதாக ரசிகர்கள் குறிப்பிடுகிறார்கள்.