ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஆர்யா நடிப்பில் டில்லி பெல்லி இந்தி படத்தின் ரீமேக்கில் தயாராகி வரும் படம் சேட்டை. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா, அஞ்சலி இருவரும் நடித்து வருகிறார்கள். முதலில் அஞ்சலிக்கே முதன்மை நாயகி அந்தஸ்தை கொடுத்தவர்கள், பின்னர் ஹன்சிகாவின் மார்க்கெட் எகிறியததைத் தொடர்ந்து இப்போது ஹன்சிகாவை முதன்மை நாயகியாக்கி விட்டனர். இந்த சேதியறிந்த அஞ்சலி ஆவேசமாகி விட்டாராம்.
என்றாலும் அதுசம்பந்தமாக நேரடியாக மோதினால் தனக்குத்தான் பாதிப்பு என்பதால், சில நாட்களில் ஹன்சிகாவுடன் இணைந்து நடிக்க வேண்டிய காட்சிகளுக்காக, தான் ஸ்பாட்டுக்கு வரும்போது ஹன்சிகா அங்கு இல்லையென்றால் கடுப்பாகி விடுகிறாராம் அஞ்சலி. அதோடு அவர் வரும்வரை காட்சிகளை படமாக்காமல் தன்னை காக்க வைத்தால் இன்னும் அவருக்கு ப்ரஷ்ஷர் ஏறுகிறதாம். அதனால், இதோ ஒரு மணிநேரத்தில் வருகிறேன் என்று சொல்லிட்டு அங்கிருந்து எஸ் ஆகும் அஞ்சலி, அதன்பிறகு அன்றைக்கு முழுக்க ஸ்பாட்டில் தலைகாட்டுவதே இல்லையாம். இதனால் அதன்பிறகு ஸ்பாட்டுக்கு வந்து அஞ்சலியின் வருகைக்காக காத்திருந்து விட்டு வெறுப்போடு வெளியேறுகிறாராம் ஹன்சிகா.