ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ராதிகா சரத்குமார் நடிக்கும் சென்னையில் ஒரு நாள் படத்தில் ராதிகாவின் கணவராக நடிக்கிறார் பிரகாஷ்ராஜ். இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்தப் படத்தை முதலில் நான்தான் தயாரிப்பதாக இருந்தேன். ராதிகா முன்வந்ததும் விலகிக் கொண்டேன். நல்ல படங்களை தமிழில் கொண்டு வர வேண்டும் என்பதை எப்போதும் கொள்கையாக வைத்திருக்கிறேன். இன்றைய இளம் இயக்குனர்கள் புதிதாக சிந்தித்து புதிய புதிய படங்களை கொடுக்கிறார்கள். அந்த வகையில் பார்த்தால் சினிமாவை அடுத்து கட்டத்திற்கு கொண்டு செல்லும் பணியியில் நடிகர்களின் பங்கு குறைவாகவே இருக்கிறது. இயக்குனர்கள்தான் அதை முன்னெடுத்துச் செல்கிறார்கள். அனுபவம் வாய்ந்த நடிகர்கள், நடிகைகள் சினிமாவில் இருந்து விலகி இருக்ககூடாது. அவர்கள் சினிமாவில்தான் இருக்க வேண்டும். அந்த வகையில் ஸ்ரீதேவியின் ரீ எண்ட்ரியை நான் மனதார வரவேற்கிறேன். சந்தோஷப்படுகிறேன். இந்தப் படத்தில் ராதிகாவுடன் நடிக்கும் போது இன்னும் புதிதாக கற்றுக் கொள்கிறேன். அனுபமுள்ளவர்களுடன் நடிக்கும்போதுதான் நாமும் நடிப்பில் அடுத்த கட்டத்துக்கு செல்ல முடிகிறது. என்றார்.