அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
கமல்ஹாசனின் மகள் நடிகை ஸ்ருதிஹாசனின் சம்பளம் ரூ.1 கோடியாக உயர்ந்துள்ளது. 7 ஆம் அறிவு, 3 ஆகிய படங்களில் நடித்திருப்பவர் நடிகை ஸ்ருதிஹாசன். இந்தியில் அறிமுகமான லக் படம் ஓடாததால் அங்கு மார்க்கெட் இல்லை. தற்போது பிரபுதேவா இயக்கும் புதிய இந்தி படத்துக்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். பிரபுதேவா இந்தியில் பிரபல இயக்குனராக இருப்பதால் அவர் படத்தில் நடிப்பதன் மூலம் இந்தியில் தனது மார்க்கெட் உயரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளார்.
இதுவரை ரூ.40 லட்சம், ரூ.60 லட்சம் என்றுதான் சம்பளம் வாங்கினார். ஆனால் தற்போது பலுபு என்ற தெலுங்கு படத்தில் நடிக்க ஸ்ருதிக்கு ரூ.1 கோடி சம்பளம் பேசி, ஒப்பந்தம் செய்துள்ளனர். இதில் ரவிதேஜா ஜோடியாக நடிக்கிறார். கதாநாயகிகளுக்கு ரூ.1 கோடிதான் அதிகபட்ச சம்பளமாக நிர்ணயிக்கப்படுகிறது. அதை ஸ்ருதி எட்டிப்பிடித்துள்ளதால் ஏற்கனவே ரூ.1 கோடி சம்பளம் வாங்கும் நடிகைகள் வியப்பாகியுள்ளனர். நிறைய படங்களில் நடித்த பிறகே இந்த சம்பள நிலையை தொட முடியும். ஆனால் ஸ்ருதி குறைவான படங்களிலேயே நடித்துள்ளார். சில படங்களே ஹிட்டாகி உள்ளன. இது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.