ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பரத்தின் கேரியர் கொஞ்சம் பின்தங்கி இருக்கும் காலம் இது. கேட்பார் பேச்சை கேட்டு ஆக்ஷன் அடிதடியில் இறங்கி, பன்ஞ் டயலாக் பேசி இப்போது பன்ஞ்சராகி கிடக்கிறார். காதல் படத்தில் மெக்கானிக் இளைஞன், எம் மகன் படத்தில் அப்பாவுக்கு பயந்த பிள்ளை, கண்டேன் காதலை படத்தில் அன்பைத் தேடும் பணக்கார இளைஞன், வெயில் படத்தில் பாசக்காரத் தம்பி, இப்படியான கேரக்டர்கள்தான் பரத்துக்கு பொருத்தமாக அமைந்தது. அவைகள் வெற்றியும் பெற்றது. ஆனால் இதிலிருந்து திடீரென ஆக்ஷனுக்கு ஜம்ப்பானார், பழனியில் ஆரம்பித்தார். பேரரசுவின் பன்ஞ்சு டயலாக்குகளை பேசி பயமுறுத்தினார். அதிலிருந்து பரத்தின் கேரியர் மாறிப்போனது. முன்னர் ஒப்புக் கொண்டு நடித்த திருத்தணி படமும் இப்போது வெளிவரப் போகிறது.
ஒரு கட்டத்தில் தனது தவறான முடிவை மனதால் ஒப்புக் கொண்ட பரத், ஆக்ஷன் ஏரியாவை மூட்டை கட்டி வைத்துவிட்டு புதுமையாக, வித்தியாசமாக ஏதாவது செய்து இழந்த இடத்தை பிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதுதான் சசியின் 555 படம். இந்தப் படத்தின் கதை பற்றியோ, அதில் பரத்தின் கேரக்டர் பற்றியோ யாருக்கும் தெரியாது. தனது புதிய கெட்-அப் வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக அதிகம் வெளியில் தலைகாட்டாமல் இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திருத்தணி பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார். நீண்டதாடி, அடர்ந்த தலைமுடி, மெலிந்த தேகம் என ஆளே மாறியிருந்தார். இந்த தோற்றம் குறித்து கேட்டதற்கு "புது படத்தின் கெட்-அப் அவ்வளவுதான்" என்பதோடு முடித்துக் கொண்டார். ஆனால் இது 555 படத்தின் தோற்றங்களில் ஒன்று என்கிறது பரத்துக்கு நெருங்கிய வட்டாரம்.