ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள திரைப்பட உலகில மிககுறுகிய காலத்தில் உச்சத்தை தொட்டவர் மஞ்சுவாரியார். குறைந்த படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் நெஞ்சில் குடியிருப்பவர். தனது குறுகிய சினிமா வாழ்க்கையில் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றவர். புகழின் உச்சியில் இருக்கும்போதே 1998ம் ஆண்டு நடிகர் திலீப்பை திருமணம் செய்து கொண்டு திடீரென சினிமாவை விட்டு விலகி குடும்ப வாழ்க்கைக்கு சென்று விட்டார்.
அதன்பிறகு சினிமாவில் நடிக்காவிட்டாலும் தீவிரமாக நடனம் கற்று வந்தார். இப்போது அவர் புதிதாக கற்றிருக்கும் குச்சிபுடி நடனத்தை அரங்கேற்றம் செய்ய இருக்கிறார். வருகிற அக்டோபர் 24ந் தேதி குருவாயூர் கோவில் அரங்கத்தில் அரங்கேற்றம் நடக்க இருக்கிறது. ஒரு மணிநேரத்திற்குள் 6 விதமான நடனத்தை அரங்கேற்ற முடிவு செய்திருக்கிறார். இப்போது அதற்கான ஒத்திகையில் தீவிரமாக இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: இப்போது என் கவனம் அனைத்தும் குடும்பத்திலும், நடனத்திலும் மட்டுமே இருக்கிறது. நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வந்தது. ஒப்புக் கொள்ளவில்லை. என் கணவர் என் சுதந்திரத்திற்கு குறுக்கே எப்போதும் நிற்பதில்லை. இப்போதைக்கு நடிக்கும் எண்ணம் எதுவும் இல்லை. நாளை நடிக்கலாம். அது கடவுளுக்குத்தான் தெரியும். என்கிறார்