Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டைரக்டர் பாண்டிராஜ் போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பு புகார்!

26 மே, 2012 - 12:19 IST
எழுத்தின் அளவு:

தமிழ் சினிமா டைரக்டர் பாண்டிராஜ், சென்னை போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். பசங்க படத்தின் மூலம் பிரபலமானவர் டைரக்டர் பாண்டிராஜ். இவர் தனது வக்கீல்கள் நமோநாராயணன், ரகுநாத் ஆகியோருடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். கூடுதல் கமிஷனர் அபய் குமார்சிங்கை சந்தித்து பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில், நான் இயக்கிய முதல் படமான பசங்க திரைப்படம் எனக்கு ஜனாதிபதி விருதை பெற்று தந்தது. அடுத்து நான் `மெரினா என்ற படத்தை தயாரித்து, இயக்கி வெளியிட்டேன். அந்த படமும் நன்றாக ஓடியது. இந்த நிலையில், பாலமுருகன் என்பவர், எனக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகார் மனு உண்மையானதல்ல. அவர் எனக்கு ஏற்கனவே அறிமுகமானவர். மெரினா படத்தை எடுப்பதற்கு ரூ.50 லட்சம் பண முதலீடு செய்வதாக சொன்னார். ஆனால் அவர் சொன்னபடி ரூ.50 லட்சம் தரவில்லை. ரூ.9 லட்சம் மட்டுமே தந்தார்.

ஆனால் ரூ.50 லட்சம் தந்ததாக பொய்யான புகார் கொடுத்துள்ளார். இந்த பிரச்னை தொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு உள்ளது. அவர் கொடுத்த ரூ.9 லட்சம் பணத்தையும் திருப்பித்தர தயாராக இருப்பதாக நான் தெரிவித்த பிறகும், என்மீது பொய் புகார் கொடுத்துள்ளார். பொய் புகார் கொடுத்த அவர்மீது சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன், என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வளசரவாக்கம் உதவி கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

solai melur - madurai  ( Posted via: Dinamalar Android App )
27 மே, 2012 - 17:29 Report Abuse
solai melur டைரக்டர் சார் நம்பினவன ஏமாத்தலாமா
Rate this:
Suha - Singapore,இந்தியா
26 மே, 2012 - 21:55 Report Abuse
 Suha Utter வேஸ்ட் director
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in