ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாளத்தில் வெளியான சூப்பர்ஹிட் படமான பிரேமம் படத்தில் மலர் டீச்சராக அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை சாய்பல்லவி. அதன்பின்பு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தியா என்கிற படத்தின் மூலம் தமிழில் நுழைந்த சாய் பல்லவிக்கு, அந்த படம் அவ்வளவாக வரவேற்பு கொடுக்க வில்லை
இந்த நிலையில் மாரி-2 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார் சாய் பல்லவி. இந்த படத்தில் அவருக்கு ஆட்டோ டிரைவர் வேடம், இந்த படம் வரும் 21ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில், நடிகர் ரோபோ சங்கர் சாய்பல்லவி பற்றி பேசும்போது, இந்த படம் வெளியான பின்பு அனைவரும் சாய்பல்லவியை 'பொம்பள தல' என அழைப்பார்கள் என்று பட்டம் கொடுத்து கலாட்டா செய்தார். அதைவிட ரோபோ சங்கர் அப்படி பேசியபோது அவர் தன்னைத் தான் குறிப்பிடுகிறார் என சாய் பல்லவி தன்னை அறியாமலேயே தலையை நிமிர்த்தி பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.