ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்து வந்தவர் பாலசரவணன். அதையடுத்து குட்டிப்புலி படத்தில் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், டார்லிங் என பல படங்களில் நடித்து வேகமாக வளர்ந்து கொண்டிருந்த பாலசரவணனை, சமீபகாலமாக அதிகமான படங்களில் பார்க்க முடியவில்லை.
இதற்கு காரணம், விஜய்க்கே என்னிடம் நல்ல கதை உள்ளது என்று ஒரு பேட்டியில் தெரிவித்த பால சரவணன், அதையடுத்து இயக்குநராக தயாராகி விட்டதாக செய்திகள் வெளியாகின. விளைவு, அவருக்கான படவாய்ப்புகள் குறைந்தன.
தற்போது ஓரிரு படங்களில் மட்டுமே நடித்து வரும் பாலசரவணன், சினிமா விழாக்களில் பேசும்போது, அங்கு வந்திருக்கும் முன்னணி டைரக்டர்கள் மற்றும் நடிகர்களிடம் தனக்கு படங்களில் நடிக்க வாய்ப்புத்தருமாறு நேரடியாகவே கேட்டு வருகிறார்.