ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தமிழ் சினிமாவில் அஜித் தனது கைப்பட பிரியாணி செய்து படக்குழுவினருக்கு விருந்து கொடுப்பது நமக்கு தெரியும். அதேபோல மலையாள சினிமாவில் மம்முட்டியும் தனது படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து கொடுப்பதை தவறாமல் கடைபிடித்து வருகிறார். கடந்த இருபது வருடங்களுக்கு முன் மம்முட்டி- மோகன்லால் இருவரும் 'ஹரிகிருஷ்ணன்ஸ்' என்கிற படத்தில் இணைந்து நடித்தனர்.
அப்போதிருந்து தனது படக்குழுவினருக்கு படம் முடிவதற்குள் ஒருநாள் தனியாக பிரியாணி விருந்து கொடுக்க ஆரம்பித்தாராம். இந்த இருபது வருடத்தில் பண்டிகை நாள், பிறந்தநாள், படப்பிடிப்பு நிறைவு நாள் என வருடத்திற்கு ஐந்து முறையாவது தான் கலந்துகொள்ளும் படப்பிடிப்பு தளத்தில் பிரியாணி விருந்தளித்து வருகிறார். இந்த பிரியாணி விருந்தின் எண்ணிக்கை தற்போது நூறையும் தாண்டி விட்டதாம்.