ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாளத்தில் திலீப் நடித்த ராம்லீலா என்கிற சூப்பர்ஹிட் படத்தை இயக்கி, இயக்குனராக அறிமுகமானவர் அருண்கோபி. முதல்படத்தையே 100 கோடி வசூல் கிளப்பில் இணைத்த அருண்கோபிக்கு பரிசாக தனது மகன் பிரணவ் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்று கொடுத்தார் மோகன்லால்.
இருபத்தியொன்னாம் நூற்றாண்டு என டைட்டில் வைக்கப்பட்டுள்ள அந்தப்படத்தையும் தற்போது இயக்கி முடித்துவிட்ட அருண்கோபிக்கு அடுத்து மிகப்பெரிய ஜாக்பாட்டாக மோகன்லால் படத்தையே இயக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
மோகன்லால் நடித்த புலி முருகன் படத்தை தயாரித்த தோமிச்சான் முலகுபாடம் தான் இந்தப்படத்தை தயாரிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அவரே வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்ல, பிரணவ்-அருண்கோபி கூட்டணியில் உருவாகியுள்ள இருபத்தியொன்னாம் நூற்றாண்டு படத்தையும் இவர்தான் தயாரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.