சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
கே.பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் படத்தில் நடிகரானவர் ரஜினிகாந்த், தற்போது 2.ஓ வரை அவர் 162 படங்களில் நடித்து விட்டார். அடுத்தபடியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தனது 163வது படத்திற்காக தயாராகிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் ரஜினி அளித்த ஒரு பேட்டியில், நான் எனது வாழ்வாதாரத்திற்காகத்தான் ஆரம்பத்தில் நடிக்கத் தொடங்கினேன். அதன்பின் எனது வாழ்க்கையின் தேவைகளை பூர்த்தி செய்தேன். இப்போது நான் அதை அனுபவித்து வருகிறேன். எல்லாமே நாடகம் என்பது தான் இத்தனை ஆண்டு கால வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்ட பாடம்.
மேலும், நடிப்பை பொழுதுபோக்காகத்தான் நினைக்கிறேன். தொழிலாக நினைக்கவில்லை. காரணம், நடிப்பை தொழிலாக நினைத்தால் அது நமக்கு சுமையாகி விடும். அதனால் நடிப்பை எப்போதுமே ஒரு விளையாட்டாக பொழுதுபோக்காக மட்டுமே நான் செய்து வருகிறேன். விளையாட்டாக எதிர்கொள்ளும்போதுதான் எனக்கு தேவையான எனர்ஜி கிடைக்கிறது.
நான் அரசியலுக்கு வர வேண்டும் என்பது இறைவனின் விருப்பம். அரசியல் என்பது மிகப் பெரிய விளையாட்டு. ஆனால் மிகவும் ஆபத்தானது. அதனால் மிக கவனமாக, நிதானமாக விளையாடி வருகிறேன். அரசியலுக்கு வந்த பிறகும் படங்களில் நடிப்பீர்களா என பலரும் கேட்கிறார்கள். நிச்சயம் நடிப்பேன். என் உடலில் தெம்பு இருக்கும் வரை படங்களில் நடிப்பேன் என்று கூறியுள்ளார் ரஜினிகாந்த்.