ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாளத்தில் 'பிரேமம்' படம் மூலம் புகழ்பெற்ற சாய் பல்லவி தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் நடித்துள்ள 'பாடி பாடி லெச்சே மனசு' என்கிற படம், வரும் டிச-2௦ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த நேரத்தில், தயாரிப்பாளரிடம் சாய் பல்லவி அதிக பணம் கேட்டு அடம்பிடித்தார் என்கிற செய்தி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹனு ராகவபுடி என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தை எடுத்து முடித்து எடிட் பண்ணிய பிறகு இன்னும் சில காட்சிகளை எடுத்து இணைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்த இயக்குனர், சாய் பல்லவியை அழைத்து விஷயத்தை கூறினாராம். சாய் பல்லவியும் அவர்கள் கேட்ட இரண்டு தேதிகளை தந்து நடித்தும் கொடுத்தாராம்.
இயக்குனரோ அதற்கடுத்தும் இன்னும் கொஞ்சம் மாற்றம் செய்யவேண்டும் என கூறி மீண்டும் தேதி கேட்டு சாய் பல்லவியிடம் கோரிக்கை வைத்தாராம். ஆனால், சாய் பல்லவியோ அதற்கு தனியாக சம்பளம் கொடுத்தால் தான் நடிக்க வருவேன் என கறாராக கூறிவிட்டாராம். ரிலீஸ் தேதி வேறு நெருங்கி விட்டதால் வேறு வழியின்றி அவர் கேட்ட தொகையை கொடுத்து அவரை வைத்து மீண்டும் காட்சிகளை படமாக்கினார்களாம்.