ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் அஜித் தற்போது தனது குடும்பத்தினருடன் கோவாவில் ஓய்வெடுத்து வருகிறார். ஒரு மாஸ் ஹீரோ என்ற எந்த பிம்பமும் இல்லாமல் கோவா கடற்கரையை ஒட்டிய ரிசார்ட்டில் தானே, தன் குடும்பத்திற்கு சமையல் செய்து கொடுத்து மனைவி, குழந்தைகளுடன் சந்தோஷமாக இருந்து வருகிறார்.
கடற்கரை சாலையில் தினமும் தன் மகள் அனோஷாவுடன் சைக்கிளில் செல்வது அஜித்தின் வழக்கம். அப்படி கடந்த 17ந் தேதி மகளுடன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு ரசிகர் அஜித்தை அடையாளம் கண்டு கொண்டார். தல... தல... என்ற அவரை துரத்தி உள்ளார்.
அப்போது சைக்கிளை விட்டு இறங்கி நின்ற அஜித், அந்த ரசிகரை அழைத்து நான் குடும்பத்தோட பிரைவசிக்காக இங்க வந்திருக்கிறேன். தொந்தரவு தராதீர்கள், நான் வந்திருக்கிற தகவலை வேறு யாருக்கும் சொல்ல வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார். அதற்கு அந்த ரசிகர் புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசையை தெரிவித்திருக்கிறார்.
இது மாதிரி விஷயங்கள் மகளுக்கு தெரியக்கூடாது என்று அவளை எளிமையாக வளர்க்கிறேன். உங்கள் போன் நம்பர் கொடுங்கள் நானே உங்களுக்கு போன் செய்கிறேன் என்று கூறியுள்ளார். அந்த ரசிகரும் தனது போன் நம்பரை கொடுத்திருக்கிறார். அதன் பிறகு அஜித், மகளுடன் சென்று விட்டார்.
ஒரு மணி நேரத்திற்கு பிறகு அந்த ரசிகருக்கு அஜித்திடமிருந்து போன் வந்தது. ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரச் சொல்லியிருக்கிறார். அங்கு அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டு அனுப்பி வைத்திருக்கிறார். அந்த போட்டோவுடன் இந்த விபரங்களை தனது முகநூலில் வெளியிட்டிருக்கிறார் அந்த ரசிகர்.