ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல நடிகர் அர்ஜூன். இவர் மீது நடிகை ஸ்ருதி ஹரிகரன், நிபுணன் என்ற தமிழ் படத்தில் நடித்தபோது அர்ஜூன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறினார். அதோடு பெங்களூரு கப்பன் பார்க் காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தார். போலீசார் அர்ஜுன் மீது 3 பிரிவுகளில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதுதவிர அர்ஜுன், நடிகை ஸ்ருதி ஹரிகரன் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். இரு வழக்கிலும் ஜெயிப்பதற்காக காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்கு நேற்று குடும்பத்துடன் சென்று வழிபட்டார்.
இந்த கோவிலில் வழிப்பட்டால் தீராத வழக்குகளும் தீர்ந்து நிம்மதி கிடைக்கும் என்பது ஐதீகம். நேற்று காலை 9 மணிக்கு கோவிலுக்கு வந்த அர்ஜூன், கோவிலில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு செய்துவிட்டுச் சென்றார்.