ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் திலீப். கடத்தல் வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் தான் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு ஒன்று ஜெர்மனியில் வருகிற டிசம்பர் 15ந் தேதி முதல் 30ந் தேதி வரை நடக்கிறது. அதற்கு வெளிநாடு செல்ல வசதியாக தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க போலீசுக்கு உத்தர விடவேண்டும் என்று திலீப் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். "வழக்கை தாமதம் செய்யும் நோக்கத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டுக்கு செல்வது சாட்சிகளை கலைப்பதற்காக இருக்கலாம்" என்றார்.
இதற்கு திலீப்பின் வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதுவரை கோர்ட் விதித்த எந்த நிபந்தனையையும் திலீப் மீறவில்லை. போலீஸ் விசாரணைக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். சமூகத்தில் பொறுப்புள்ள குடிமகன் அவர். கோடி கணக்கில் அரசுக்கு வருமானவரி செலுத்துகிறார்" என்று வாதிட்டார்.