ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே. தமிழில் காதலர் தினம், கண்ணோடு காண்பதெல்லாம் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்த சோனாலிக்கு வாய்ப்புகள் குறைந்ததும், இயக்குனர் கோடிபெல்லை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார்.
43 வயதாகும் சோனாலி பிந்த்ரேவுக்கு மூன்றாவது நிலை புற்றுநோய் வந்துவிட்டது. இந்தியாவில் எடுத்துக் கொண்ட சிகிச்சையில் முன்னேற்றம் இல்லாததால் தற்போது அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். புற்று நோயுடன் அவர் தொடர்ந்து போராடி வருகிறார். கீமோ தெரபி சிகிச்சையால் அவரது தலைமுடிகள் உதிர்ந்து விட்டது.
மொட்டைத் தலையுடன் இருக்கும் தனது புகைப்படத்தை இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டுள்ள சோனாலி, "நமது தோற்றம் அழகாக இருக்க வேண்டும் என்பதே எல்லோருடைய ஆசை. அழகு இல்லாவிட்டால் அது ஆழ்ந்த உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும். அப்போது மனம் தளர்ந்து விடாமல் மகிழ்ச்சியாக இருப்பதற்குரிய விஷயங்களை செய்ய வேண்டும், நம் தோற்றம் பற்றிய கர்வம் மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடாது" என்று கூறியிருக்கிறார்.
தொடர்ந்து நடக்கும் கீமோ தெரபி சிகிச்சையில் தன் கண் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், சில நேரங்களில் பார்க்க முடியவில்லை என்றும் கூறியுள்ள சோனாலி, தற்போது கண் பாதிப்பில் இருந்து மீண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.