ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் திரையுலக பெண்களின் பாதுகாப்புக்கு, விசாகா கமிட்டி அடிப்படையில், குழு அமைக்க, நடிகர் சங்க அவசர செயற்குழுவில், முடிவு செய்யப்பட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம், சென்னையில், நேற்று நடந்தது. இதில், மீ டூ விவகாரம் குறித்தும், பெண்களுக்கான பாதுகாப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்ட முடிவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து, தலைவர் நாசர் கூறியதாவது :
நடிகர் சங்கத்தினரின் சுயமரியாதை, உரிமைகளை காப்பாற்றும் வகையில், ஏற்கனவே தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சட்டங்கள் உள்ளன. இருப்பினும், நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, விசாகா கமிட்டி அடிப்படையில், குழு அமைக்கப்படும். அக்குழுவில், பெரும்பான்மையாக மகளிர் இடம் பெறுவர். அத்துடன், உளவியல் ரீதியான பிரச்னைகளை அலசி ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிக்க, மனநல மருத்துவர் ஒருவரும் இடம் பெறுவார். இக்குழு, ஆண், பெண் வேறுபாடின்றி, பிரச்னைகளை பொதுவாக அணுகும். படப்பிடிப்பு தளங்களில், அனைத்து தொழிலாளர்களை பாதுகாக்கவும், சுயமரியாதைக்காகவும், ஒரு குழு அமைக்க தயாரிப்பாளர் சங்கத்திற்கு பரிந்துரை செய்யப்படும்.
இவ்வாறு, நாசர் கூறினார்.