அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா |
கடந்த 2015ல் மலையாளத்தில் வெளியான ஒரு வடக்கன் செல்பி' என்கிற வெற்றிப்படத்தை இயக்கிய ஜி.பிரஜித் அதை தொடர்ந்து தெலுங்கில் இருந்து அழைப்பு வர, அங்கே வடக்கன் செல்பி' படத்தை ரீமேக் செய்து இயக்கினார். அதையடுத்து தற்போது மலையாளத்திற்கே திரும்பிவந்து பிஜூமேனனை வைத்து உண்மைச்சம்பவங்களின் பின்னணியில் த்ரில்லர் படம் ஒன்றை இயக்கி வருகிறார் பிரஜித்.
இந்தப்படம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. இந்தநிலையில் இவரது அடுத்த படத்தில் திலீப் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். 'தொண்டிமுதலும் திரிக்சாட்சியும்' படத்திற்கு கதை எழுதிய சஜீவ் பழூர் தான் இந்தப்படத்திற்கு கதை எழுதுகிறார். திலீப் தற்போது தான் நடித்துவரும் இரண்டு படங்களையும் முடித்ததும் இதில் நடிக்கவுள்ளாராம்.